ஒரே நாளில் தமிழகத்தின் மூச்சை அமுக்கிய 2 சம்பவங்கள்

தமிழகத்துக்கு காவிரி, நீட் விவகாரங்களில் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவுகளும் நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி, நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்- வீடியோ

    சென்னை: தமிழக்கத்தின் மூச்சையே நிறுத்தி சுடுகாடாக்கும் 2 சம்பவங்கள் தமிழர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

    காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட நீரின் அளவையும் திறந்துவிடவில்லை.

    TN faces 2 Shocking incidents on today

    இப்போது மேலாண்மை வாரியம் வழக்கில் மே 3-ந் தேதியாவது ஏதேனும் நல்லது நடக்கும் என தமிழகம் காத்திருந்தது. ஆனால் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இல்லை.

    அதைவிட பெருங்கொடுமை, கர்நாடகாவுக்கு பிரதமர், அமைச்சர்கள் போய்விட்டதால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியாது என சொத்தை காரணத்தைச் சொல்லி தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

    இச்செய்திகள் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே, மூச்சுவிட முடியாத அளவுக்கு இன்னொரு உத்தரவு... தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்துக்குத்தான் செல்ல வேண்டும்; தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.

    இப்படி தமிழக மக்கள் மூச்சே விட முடியாமல் மூர்ச்சையாகிப் போகும் அளவுக்கு ஒரே நாளில் 2 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+