டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு நோட்டீஸ்.. சென்னையில் அதிரடி!
டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் தினந்தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். டெங்குவை தடுப்பதற்காகவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.
எனினும் ஆங்காங்கே உயிரிழப்புகள் அதிகமாகிறதே தவிர, டெங்கு கட்டுப்படுத்தபாடில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்குவோ என்று அச்சம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்
இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காணமுடியும் என தெரிகிறது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை தொற்றுநோய் தடுப்பு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் புதுப்பேட்டை, பார்டர் தோட்டம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குப்பைகள் தேங்கியுள்ளது தெரியவந்தது.

கொசுவின் புழுக்கள்
மேற்கண்ட பகுதிகளில் உள்ள டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்கி அதில் டெங்கு பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் முட்டைகள், புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க அந்த பொருள்களை அகற்ற 2000 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் அபராதம்
2000 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குவது கடினம் என்பதால் அந்த கடைகளின் சங்கங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் 2000 கடைகளின் முன்பு தேங்கியுள்ள பொருள்களை அகற்றாவிட்டால் இந்திய தண்டனை சட்டம் 269-இன் கீழ் 6 மாத சிறையோ அல்லது ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications