8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. முதல்வருக்கு புதிய செயலாளர் நியமனம்!
8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. முதல்வரின் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 8 அதிகாரிகள் இதன் மூலம் புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
முதல்வரின் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை சிறப்பு செயலாளராக எம்.எஸ் சண்முகம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
வேலைவாய்ப்பு பயிற்சி ஆணையராக ஜோதி நிர்மலா சாமி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தின் செயலாளராக ரீட்டா ஹரிஷ் தக்கார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பொதுத்துறை சிறப்பு செயலாளராக மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் விரைவில் தங்கள் பணியை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.