For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசு.. தமிழக ஆளுநர் அறிவிப்பு

குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அலங்கார ஊர்திகளுக்கும் பரிசுகல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

TN governor gives prize to best performers in Republic function

இந்த நிலையில் தற்போது கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து கொடுக்கிறார். இந்த நிகழ்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பரிசு பொருள் வழங்கும் நிகழ்வும் நடந்தது.

அதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக ஆளுநர் விருது வழங்கினார். அதிகமாக கொடிநாள் நிதி வசூலித்ததற்காக விருது அளிக்கப்பட்டது. ஆட்சியர் சுந்தவல்லி பரிசினை பெற்றுக்கொண்டார். 1 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 3.42 கோடி வசூல் செய்து இருக்கிறார்.

மேலும் அணிவகுப்பில் வந்த சிறப்பான அலங்கார ஊர்திகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. உயர்கல்வி துறைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.

English summary
India's 69th Republic day celebrates today. On the occasion of the Republic Day of Chennai, the governor Panvarilal Purohit is hoasiting flag at Gandhi statue. After the celebration TN governor gives tea party in Raj Bhavan.TN governor gives prize to best performers in Republic function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X