ராஜ்பவனில் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து.. விவிஐபிக்கள் பங்கேற்பு!
குடியரசு தினத்தையொட்டி ராஜ்பவனில் ஆளுநர் தேநீர் விருந்து கொடுக்கிறார்.
சென்னை: குடியரசு தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து கொடுக்கிறார். இதில் பல முக்கியமான நபர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து கொடுக்கிறார். இதில் சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் ''உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள்'' பங்கேற்கிறார்கள்.