அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்... ஜெ. உடல் நலம் விசாரித்தார்
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த அவர், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு புறப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அமைச்சர்கள் உட்பட யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் சில விஷமிகள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வரை ஆளுநர் ஏன் இதுவரை நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரே நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்தவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்.
முன்னதாக ஆளுநரின் வருகையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications