சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் தனியார் நிறுவனங்கள் 2 நாட்கள் விடுப்பு அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. இன்னமும் இந்த மழை 48 மணிநேரத்துக்கு மிக மோசமாகிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 2 நாட்கள் பணியாளர்களுக்கு விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் அல்லது பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications