கரண்ட் கம்பியை உயர்த்தி உயர்த்தி.. சபாஷ் கண்டக்டர்.. வாழ்த்திய பயணிகள்.. வேதாரண்யத்தில் பலே சம்பவம்!
உயிரை பணயம் வைத்து பயணிகளை பாலமுருகன் என்பவர் காப்பாற்றியுள்ளார்.
Recommended Video

வேதாரண்யம்: ஜனங்கள காப்பாத்தணும்னு முடிவு பண்ணிட்டா, இவர் பேச்சை இவரே கேட்க மாட்டாரு போல இருக்கு!
மனித குலத்தை வாழ வைப்பவர்கள் எங்கோ மூலையில் மக்களோடு மக்களாக கலந்து கிடப்பார்கள். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும்தான் அவரின் மனிதாபிமானத்தையும், குணத்தையும் வெளி உலகுக்கு எடுத்து வந்து காட்டுகிறது.
அப்படித்தான் கஜா மூலம் நமக்கு தெரியவந்திருக்கிறார். அவர் பெயர் பாலபைரவன் ஆகும். இவர் ஒரு அரசு பஸ் கண்டக்டர்!

விடிய விடிய மழை
கஜாவால் நிறைய பாதிக்கப்பட்டது நாகைதான். ஊரெல்லாம் மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. கரண்ட் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. செல்போன் டவர்கள் வளைந்து நெளிந்து செயலிழந்து உள்ளன. இதனால போக்குவரத்து பெரும் பாடாகிவிட்டது. இதில் நேற்றிரவு எல்லாம் விடிய விடிய மழை பெய்ததால், நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

அரசு பஸ்
ஏற்கனவே நாகையில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,சென்னையிலிருந்து வேதாரண்யத்துக்கு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்ஸின் கண்டக்டர் தான் பாலபைரவன். சென்னையிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல்தான் பஸ் சென்றது. ஆனால்

கண்டக்டர் பாலபைரவன்
நாகையை நெருங்கும்போதுதான் ஆபத்து அதிகமானது. வேதாரண்யத்தில் ஈசிஆர் சாலையில் பஸ் நுழைந்தது. வழியெல்லாம் கரண்ட் கம்பிகள் அறுந்துக் கிடந்தன. மரங்கள் குறுக்கே விழுந்து கிடந்தன. இதையெல்லாம் சமாளித்துதான் வண்டி போனது. ஆனால் ஒரு இடத்தில் பஸ் போக முடியாத அளவுக்கு கரண்ட் கம்பி கீழே கிடந்தது. அந்த கம்பியை தாண்டி போகவே முடியாத நிலை. அதனால் கண்டக்டர் கீழேஇறங்கிவிட்டார்.

கரண்ட் கம்பிகள்
சுற்றிமுற்றிலும் பார்த்து, ஒரு மரக்கிளையை தூக்கி வந்தார். அந்த மரக்கிளை மழை பெய்ததில் முழுசா ஈரமாக இருந்தது. அதை வைத்து, அந்த கரண்ட் கம்பியை தூக்கி பிடித்து நின்றார். அந்த கேப்பில் பஸ் நகர்ந்து சென்றது. இப்படி ஒரு இடம் இல்லை... வழியெல்லாம் அறுந்த கிடந்த கரண்ட் கம்பியை இப்படியே தூக்கி தூக்கி உயர்த்தி பிடிக்க, பஸ் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று கடைசியில் வேதாரண்யம் வந்து சேர்ந்தது.

குவியும் பாராட்டுக்கள்
கம்பியில் கரண்ட் மட்டும் இருந்திருந்தால் பயணிகளின் நிலைமை என்ன ஆகியிருக்குமோ தெரியாது. தன் உயிரையும் பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய இந்த கண்டக்டரின் இந்த காரியம் வீடியோவாக வைரலாகி வருகிறது. கூடவே கண்டக்டருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications