இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகள் மூடல்.. தென்காசியில் குடிமகன்கள் திண்டாட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தென்காசியில் இயங்கி வந்த 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தென்காசி: தென்காசி பகுதியில் இரவோடு இரவாக 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால், அக்கடைகளை மூட வேண்டும் என சமூக நீதிக்கான பேரவையின் தலைவர் கே. பாலு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் 3321 டாஸ்மாக் கடைகள் மூட உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தென்காசி நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம், அரசு பணிமனை ஆகிய பகுதிகளில் இருந்த 10 டாஸ்மாக் கடைகளும், குற்றாலத்தில் உள்ள 2 கடைகளில் ஒரு கடையும், தமிழக கேரளா எல்லையான
பிரானூர் பார்டரில் ஒரு கடையும் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தென்காசி பகுதியில் அச்சன்புதூர், சுந்த்ரபாண்டியபுரம், குற்றாலம் செங்கோட்டை வல்லம் ரோடு ஆகிய சில பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் சரக்கு கிடைக்காமல் கூட்டம் ஆங்காங்கே அலைமோதி வருகின்றனர். செங்கோட்டை வல்லம் ரோட்டிலுள்ள கடையில் சரக்கு வாங்க வெளியூர்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்து சரக்குகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
அங்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரக்கு விலையில் கூடுதல் விலைக்கு கடை ஊழியர்கள் விற்பனைசெய்து வருவதாகவும், அட்டைபெட்டிகளில் கள்ளத்தனமாக மொத்தமாக சரக்குகளை விற்ப்பனை செய்வதாகவும், சரக்கு விலைபோக மீதி சில்லறைகளை வழங்காமல் இருப்பாதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications