குடிமகன்களே.. குவார்டருக்கு ரூ. 12 விர்.. ஃபுல்லுக்கு ரூ. 48 ஜிவ்.... லிஸ்ட்டைப் பாருங்க!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குவாட்டருக்கு ரூ. 12ம் முழு பாட்டிலுக்கு ரூ. 48ம் உயர்த்தப்பட்டுள்ளதால் 'குடி' மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மதுபானங்கள் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.3600 கோடி கூடுதலாக டாஸ்மாக்கிற்கு வருமானம் கிடைக்கும். மது விலை ஏற்றத்தினால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் மது விலையை உயர்த்துவது என அமைச்சரவை முடிவு செய்தது.

தமிழகத்தில் மதுபானங்கள் விலையை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசு உயர்த்தியது. பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குவார்ட்டருக்கு அதிகபட்சம் ரூ.12ம், புல் பாட்டிலுக்கு அதிக பட்சம் ரூ.48ம் அதிகரித்துள்ளது. விலை உயர்வை கேட்டு குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபானங்களில் கோல்டன் க்ரேப் , ஓல்ட் மங்க் ரம், மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஆகியவவை ரூ. 352 ரூ.176 ரூ. 88
என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அவை முழு பாட்டில் ரூ. 400, ஆஃப் 200, குவாட்டர் ரூ.100 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல குவாட்டர், ஆஃப், முழு பாட்டில்களில் சில்லரை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ரவுண்ட்டாக விலை உயர்த்தி விட்டனர்.
ஹனி பீ மீடியம் பிராந்தி, எம்சி டவல் மீடியம் பிராந்தி பிராண்டுகள் தற்போது ரூ. 440 ரூ. 220 ரூ. 110 ஆக விற்பனையாகிறது.
பிரீமியம் ரம், எம்சி டவல் க்ரீன் விஸ்கி ஆகியவை ரூ. 520 ரூ. 260 ரூ. 130 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்ச்சூரி விஸ்கி ரூ. 560 ரூ. 280 ரூ. 140 என்றும், கோல்டு பிராந்தி ரூ. 600 ரூ. 300 ரூ. 150 ஆக விற்பனையாகிறது.
பிரீமியம் விஸ்கி ரூ. 760, ரூ. 380 ரூ. 190 ஆக விற்பனையாகிறது. இதே போல அன்டிகியூட்டி புளூ
சூப்பர் பிரீமியம் விஸ்கி ரூ. 1120 ரூ.560 ரூ. 280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பிராந்தி, வோட்கா, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டாலும், பீர் மற்றும் ஒயின் விலையை அரசு உயர்த்தவில்லை. இதனால், பீர், ஒயின் பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த விலை ஏற்றத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.3ஆயிரத்து 600 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுப்படி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.
எனவே, சம்பள உயர்வால் ஏற்படும் நிதிநெருக்கடியை சமாளிக்க அரசு மது விலையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications