இந்தக் கடிதம் கொண்டு வருபவரிடம் 10 கபாலி டிக்கெட் தரவும்.. அமைச்சர் "பி ஏ" ஏற்படுத்திய கிலி!
சென்னை: கபாலி பட டிக்கெட்டுக்களுக்காக தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. சிபாரிசு கடிதம் அளித்ததாக ஒரு செய்தி வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை வெளியாக உள்ளது. இதனால் திரும்பும் பக்கம் எல்லாம் கபாலி பேச்சாகவே உள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. அதாங்க உதவியாளர் டிக்கெட் கேட்டு அபிராமி தியேட்டருக்கு சிபாரிசு கடிதம் எழுதியுள்ளாராம்.
அவர் கடிதத்துடன் கூடிய இந்த செய்தி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. அதை அப்படியே உங்களுக்கும் தெரிவிக்கலாம் என நினைத்தோம்.
தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய சிபாரிசு கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தலைமைச் செயலகம்,
சென்னை
தேதி: 15.7.2016
வி. பிரேம்குமார்
செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் மூத்த உதவியாளர்
பெறுநர்,
மேனேஜர்,
அபிராமி தியேட்டர்,
சென்னை- 7
ஐயா,
இந்த கடிதத்தை கொண்டு வரும் திரு ரிஸ்வான் அவர்களுக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான 10 டிக்கெட்டுகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.