சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டியுள்ளதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி அதிகாரிகளோடு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் வேலுமணி, 'மாநகராட்சி சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 1500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. 75% அதிகமான பணிகள் நிறைவடைந்துவிட்டன' என்றார்.
மேலும், மழை பாதிப்புகளைக் கண்காணிக்க 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 75 பணியாளர்களோடு 24 மணிநேரமும் இயங்கும் கண்காணிப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல் மற்றும் தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய ஐந்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
'அமெரிக்கா, லண்டன், பெங்களூரு ஆகிய நகரங்களை விட சிறப்பான மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வேண்டுமென்றால் நேரடியாக அழைத்துச் சென்று காட்ட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை வேண்டுமென்றே குறை சொல்கிறார்' என்றார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications