For Daily Alerts
Just In
மண்டேலா மறைவு: தமிழக அரசு 5 நாள் துக்கம் அனுஷ்டிப்பு
சென்னை: தென்னாப்பிக்காவின் முன்னாள் அதிபரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்முகமாக தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது. இதன் காரணமாக டிசம்பர் 6 (வெள்ளிக்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை அரசு சார்பில் எந்த விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறாது.
அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
TamilNadu government on Friday mourned the death of anti-apartheid icon Nelson Mandela.