மீனவர் பிரச்சனை... சுஷ்மா ஸ்வராஜூடன் தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதி சந்திப்பு: பொன். ராதா
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதி சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாக நடக்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதியன்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து பேச உள்ளனர். விரைவில் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும்.
வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications