ஓஎன்ஜிசி பணியை கைவிடுக... நெய்குன்னம் நோக்கி 500 பேர் பேரணி!
தஞ்சாவூர் மாவட்டம் நெய்குன்னத்தில் நடக்கும் ஓஎன்ஜிசி பணியை தடுக்க அம்மாபேட்டையில் இருந்து திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோருடன் 500 பேர் பேரணியாக தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நெய்குன்னத்தில் நடக்கும் ஓஎன்ஜிசி பணியை தடுக்க அம்மாபேட்டையில் இருந்து திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேரணி தொடங்கியுள்ளனர். இவர்களுடன் கிராம மக்கள் 500 பேரும் ஓஎன்ஜிசி பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 5,000 சதுர கி.மீ. சுற்றுப்பகுதியில் 39 இடங்களில் எண்ணெய் நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அடுத்த நெய்குன்னத்தில் கச்சா எண்ணெய்க்கான கிணறு அமைக்கும் பணியை எண்ணெய் நிறுவனம் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக கச்சா எண்ணெய் எடுத்து விட்டு பிறகு 1,600 அடி முதல் 2,000 அடி வரை ராட்சத ஆழ்குழாய்கள் அமைத்து மீத்தேன் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளதாக காவிரி சமவெளி படுகை பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாட்டுகிறது. எனவே கச்சா எண்ணெய் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மேற்கு தஞ்சை முழுவதும் தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களை திரட்டி விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாபேட்டையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் தலைமையில் 500 பேர் பேரணியாக செல்கின்றனர். நெய்குன்னம் வரை செல்லும் இந்தப் பேரணியின் முடிவில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தக் கோரி போராட்டமும் நடைபெற உள்ளது.


-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications