பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணி அதிகாரி, பொதுமக்கள் மீது கேரளா போலீஸ் தடியடி- பதற்றம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் பொதுமக்கள் மீது கேரளா போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளா எல்லையில் தமிழகத்துக்குச் சொந்தமான பரம்பிக்குளம் அணை உள்ளது. பரம்பிக்குளத்தின் அணை பரமாரிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையை பார்வையிட தமிழக அதிகாரிகள் சென்ற போது கேரளா போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர்.
இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கேரளா போலீசார் தடியடி நடத்தினர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
கர்நாடகாவுடன் தமிழகம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கேரளா போலீசார் தடியடி நடத்தியிருப்பது பொள்ளாச்சி எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications