ஓபிஎஸ் ஆட்சி அமைப்பார் எனில் தாவ நாங்க ரெடி... நிபந்தனை விதிக்கும் அமைச்சர்கள்.. பீதியில் தினகரன்
ஓபிஎஸ் ஆட்சி அமைக்க முடியும் அணி மாற நாங்களும் தயார் என அமைச்சர்கள் உறுதிமொழி கொடுத்திருப்பதை கேட்ட தினகரன் பீதியில் உறைந்து போனாராம்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என உத்தரவாதம் கொடுத்தால் அணி மாற நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமைச்சர்கள் பலரும் உத்தரவாதம் கொடுத்து வரும் தகவல் தினகரனை பெரும் பீதியடைய வைத்துள்ளதாம்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எப்படியும் வென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார் தினகரன். அவரது ஆதரவாளர்களோ தினகரன் ஜெயித்தாலும் முதல்வராக மாட்டார் என எழுதிக் கொடுக்க தயார் என்கின்றனர்.

ஆனால் ஓபிஎஸ் அணி தரப்போ, முதலில் ஜெயிக்க வழியைப் பாருங்கள் என பொடி வைத்து பேசிக் கொண்டிருக்கிறது. அத்துடன் அமைச்சர்கள் பலரும் தொடர்ந்தும் ஜரூராக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது ஓபிஎஸ் அணி.
அமைச்சர்களைப் பொறுத்தவரையில் கூவத்தூர் காலத்திலேயே உங்களால் எம்.எல்.ஏக்களை வளைக்க முடியவில்லை.. இப்போது நீங்கள் ஆட்சி அமைக்க முடியும் என உத்தரவாதம் தாருங்கள்... உடனே அணி மாற ரெடி என உறுதி தருகிறார்களாம்.
ஓபிஎஸ் அணியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரும் நிச்சயம் இந்த முறை நீங்கள் நம்பலாம்.. நம்மால் ஆட்சி அமைத்துவிட முடியும். காலச் சூழல் மாறிவிட்டது என பல சம்பவங்களை சுட்டிக்காட்டி நம்பிக்கை கொடுத்து வருகிறார்களாம்.
அமைச்சர்கள் பலரும் சகஜமாக ஓபிஎஸ் அணியுடன் பேசுவதை உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் தினகரன் பார்வைக்கு கொண்டு போயுள்ளன. அவர்களது தொலைபேசி உரையாடல்களை கேட்ட தினகரன் ரொம்பவே பீதியடைந்து போனராம். நம்மை யாருமே நம்பலையே என நொந்து வெந்து போனராம் தினகரன்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications