காவிரி மேலாண்மை வாரியத்திற்காக முழுஅடைப்பு... தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்! போக்குவரத்து துறை உத்தரவு

    திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு காவிரி வாரியத்தை அமைக்கவில்லை. மாறாக தீர்ப்புக்கு விளக்கமும், மேலும் 3 மாதம் கால அவகாசம் கோரியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றன.

    TN shops closed due to DMK announced bandh

    இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று திமுக தனது தோழமைக் கட்சிகளுக்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

    திமுகவின் இந்த மழு அடைப்பிற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    TN shops closed due to DMK announced bandh

    திருச்சியில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பில் சுமார் 70 ஆயிரம் கடைகள் பங்கேற்றுள்ளதால் ரூ. 5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன.

    TN shops closed due to DMK announced bandh

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பாத்திரக் கடைத் தொழிலார்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளதால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி நகரமான ஈரோட்டிலும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 30 சதவீத ஜவுளி மற்றும் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+