விடாது கொட்டும் அடைமழையால் அவதி: சென்னை, புறநகர் பகுதிகள் மூழ்கின- மின்சாரம் துண்டிப்பு
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரமாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போயுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளநீரில் விஷ ஜந்துக்களும், பாம்புகளும் படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

24 மணிநேரம் கொட்டிய மழை
இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரையிலும் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகியது.

குளமாக மாறிய சாலைகள்
தொடர் மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்
கோயம்பேடு, அமைந்தகரை, வடபழனி, தியாகராயநகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கொரட்டூர், அண்ணாநகர், திருமங்கலம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை நீர் வடிய இடமின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

மூழ்கிய குடியிருப்புகள்
கடந்த திங்கட்கிழமை முதலே சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல வில்லிவாக்கம், மடிப்பாக்கம்,
வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், சென்னையின் புறநகர் பகுதிகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. கொரட்டூர் டி.வி.எஸ். நகர் பகுதிகளில் வீடுகள், வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள வினாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

முழங்கால் அளவு தண்ணீர்
கொரட்டூர் சென்டிரல் அவென்யூ சாலையில் டிரான்ஸ்பார்மரை சுற்றி முட்டளவுக்கு மழை நீர் தேங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைநீருடன் கழிவுநீர்
பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெரு, சஜ்ஜூ முனுசாமி தெரு, கொரட்டூர் சென்டிரல் அவென்யூ, ஐஸ் அவுஸ், அண்ணாநகர், திருமங்கலம், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. சில இடங்களில் கழிவு நீர், மழை நீரோடு கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனை பொதுமக்கள் கடும் சிரமத்துடன் வெளியேற்றினர்.

மாணவர்கள் அவதி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கியது. மாணவர்கள் விடுதி வளாகத்தின் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கினர்.

மூழ்கிய சுரங்கப்பாதைகள்
சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, கத்திப்பாரா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை, ஜீவா சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்பட பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகளில் முட்டளவுக்கு மழை நீர் தேங்கியது. ஜீவா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை உள்பட சில சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு
பெரும்பாலான வழித்தடங்களில் மழை நீர் தேங்கியதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பேருந்துகளின் கூரை வழியாக மழை நீர் உள்ளே புகுந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். சில இடங்களில் பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் பழுதாகி நிற்கின்றன.

இயல்பு வாழ்க்கை முடக்கம்
விடாது கொட்டி வரும் கனமழையால் சென்னை நகரிலும், புறநகரிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. சென்னை நகரிலும் புறநகர் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாம்புகளும், விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளால் மழை, வெள்ளத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications