Breaking News: நீட் பலி- மாணவர் மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு
நீட் தேர்வு மையங்களை தேடி தேடி வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் விடிய விடிய பரிதவித்தனர்.
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
Recommended Video
கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு- வீடியோ
எர்ணாகுளம்: கேரளாவில் மகனை நீட் தேர்வுக்கு அழைத்துச் சென்ற நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊரான திருத்துறை பூண்டிக்கு கொண்டுவரப்படுகிறது.
அப்பா எங்கே?
நீட் தேர்வு எழுத சென்ற இடத்தில் மரணித்து போன கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு முடிவடைந்த பின்னர் அப்பா எங்கே எனக் கேட்டு கண்கள் விரிய தேடிய காட்சிகள் கண்ணீரை வரவழைக்கிறது.
உயிர் பலி
நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்ற திருத்துறைத்துறை பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார். இதனிடையே கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் சபரி என்பவர் மயங்கி விழுந்தார்.
நீட் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சிக்கிம் என 2,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர்.
இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர். கோவையில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு செல்ல வேண்டிய ரயில் தாமதமானதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியுமா? என்கிற நிலை ஏற்பட்டிருந்தது. தாமதமாக
தமிழகத்திலும் கூட மாணவர்கள் கேட்ட தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. நீட் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கினாலும் காலை 7.30 மணி முதலே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
May 06, 2018, 8:44 pm IST
நீட் தேர்வு- மேலும் ஒருவர் பலி
May 06, 2018, 8:44 pm IST
மதுரையில் மகளை அழைத்து சென்ற தந்தை மாரடைப்பால் மரணம்
May 06, 2018, 8:44 pm IST
சிங்கம்புணரியை சேர்ந்த ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் மரணம்
May 06, 2018, 8:44 pm IST
பசுமலை மையத்தில் இருந்து திரும்பும் போது கண்ணனுக்கு நெஞ்சுவலி
May 06, 2018, 8:44 pm IST
நெஞ்சுவலியால் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
May 06, 2018, 8:44 pm IST
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் மரணமடைந்தார்
May 06, 2018, 8:43 pm IST
தந்தை கண்ணன் மரணமடைந்ததால் மகள் ஐஸ்வர்யா கதறல்
May 06, 2018, 4:37 pm IST
மதுரை நீட் தேர்வில் குளறுபடி- மாணவர்கள் போராட்டம்
May 06, 2018, 4:37 pm IST
இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரையில் போராட்டம்
May 06, 2018, 4:37 pm IST
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாரமங்கலத்தில் டவரில் ஏறி போராட்டம்