தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாடு வராது: அமைச்சர் வைத்திலிங்கம்
சென்னை: தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாடு வராது என தமிழக வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்திற்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆங்காங்கு வெங்காயங்களைத் திருடுவதும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கவும், வெங்காய விலையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.
அப்போது, இது குறித்து தமிழக வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெங்காயம் பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. விரைவில் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வெங்காய உற்பத்தி இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications