சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் மீது ஆந்திரா வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற 4 தமிழர்களை ஆந்திரா வனத்துறையினர் கொடூரமாக தாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள தடா அருவிக்கு சென்னைவாசிகள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சென்னையில் இருந்து நேற்று தடா அருவிக்கு சென்ற 4 இளைஞர்களை ஆந்திரா வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமிழக பதிவெண் வாகனங்களை ஆந்திராவுக்குள் அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது 20 தமிழர்களை சுட்டுக் கொலை செய்தது போல உங்களையும் கொன்றுவிடுவோம் எனக் கூறி காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை இளைஞர்கள் உயிர் பிழைத்தால் போதும் என திரும்பி வந்துள்ளனர்.
இச்சம்பவம் ஆந்திரா செல்லும் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications