ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் அதிரடி மாற்றம்...மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகௌரி நியமனம்!
தமிழகத்திலுள்ள 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகெளரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகெளரி நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பாட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம்:
1. டாக்டர் எம்.ரவி, சென்னை காவல் ஆணையரக கூடுதல் இயக்குனராக நியமனம்.
2. சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியான மாற்றம்.
3. கூடுதல் டிஜிபி சுனில்குமார் சிங், ஊர்க்காவல் படையின் கூடுதல் டிஜிபியாக மாற்றம்
4. ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஏ.கே.விஷ்வநாதன், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம்
5. காத்திருப்பு பட்டியலில் உள்ள எஸ்.பி. சாம்சன், சென்னைக்கு மாற்றம்
6. சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி ஜெயகௌரி சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகாரியாக நியமனம்
7. சரவணன், கோவை மாநகர துணை ஆணையர் பதவியில் இருந்து சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமனம்
8. காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்,பி மணிவண்ணன், மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
9. ஜெயஸ்ரீ, எஸ்,பி சேலம் போக்குவரத்து கழகத்தில் புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு மாற்றம்
10. கயல்விழி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்து தற்போது சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டார்.
11. காத்திருப்போா் பட்டியலில் இருந்த எம்.துரை, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக நியமினம்.
12. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.மகேஸ்வரன், சட்டம் ஒழுங்கு எஸ்பி- யாக நியமனம்.
13. தீஷா மித்தல் திருப்பூர் நகர துணை ஆணையராக இருந்த அவர், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.
14.சோனால் சந்திரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர், உணவு பொருள் புலனாய்வு துறை எஸ்பியாக மாற்றம்.
15. உணவு பொருள் புலனாய்வு துறை எஸ்பியாக ஆசியம்மாள், குற்றவியல் புலனாய்வு துறை எஸ்.பி.யாக மாற்றம்.
16. ராமநாதபுரம் கடலோரக் காவல் படை குழுவின் எஸ்பியாக இருந்த ஆர்.சக்திவேல் காலியாக உள்ள சென்னை சிஐடி சிறப்பு பிரிவின் எஸ்பியாக மாற்றம்.
17. மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஏ.ஜி.பாபு, சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.