இன்னும் பேசிக்கிட்டேதான் இருக்கார் மோடி, செயலைக் காணோம்.. ஞானதேசிகன்
தூத்துக்குடி: 100 நாள் மோடி அரசு தேர்தல் பிரச்சாரத்தின் விரிவாக்கமாகவே உள்ளது. பிரச்சாரத்தின்போது பேசியதுபோல் தற்போதும் பேசி கொண்டே இருக்கிறார் நரேந்திர மோடி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப்தற்காக தூத்துக்குடி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் தூத்துக்குடி வந்தனர்.
பாஜக எதையும் செய்யவில்லை
அங்கு செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் பேசுகையல், மீனவர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசுதான் மீனவர்கள் மற்றும் இலங்கை அரசுடன் கூட்டுபேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வந்ததது. ஆனால் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் எனத் தெரிவித்தனர் ஆனால் தற்போது மீனவர்களை விடுதலை செய்யப்படுகிறார்களே தவிர அவர்களது படகுகளை விடுவிக்கவில்லை.
சாமி கருத்து பாஜக கருத்தா, இல்லையா..
தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியம் சாமியின் கருத்து பாரதீய ஜனதாவின் கருத்தா என்பது குறித்து பாரதீய ஜனதாவின் தலைமை தெளிவுப்படுத்தவேண்டும்.
குடிப்பவர் பெருகி விட்டனர்.. குற்றமும் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது குற்றங்கள் பெருகியுள்ளது. மது குடிப்போர் அதிகரித்துள்ளனர்.
காசு இல்லை போட்டியிடவில்லை
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பணபலம் இல்லாததால் போட்டியிடவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமே இல்லையே
மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு 100நாள் தேர்தல் பிரச்சாரத்தின் விரிவாக்கமாக உள்ளது. தற்போதும் பிரச்சாரத்தில் பேசியது போலவே பேசிகொண்டே இருக்கிறார்கள். பாரதீய ஜனதா இன்னும் ஆட்சி செய்யவே ஆரம்பிக்கவில்லை. பாஜகவின் 100நாள் ஆட்சியில் ஆட்சி மாற்றத்திற்கான எந்த அடையாளமும் இல்லை என்றார் அவர்.