காங்.கை முடக்க முயலும் மத்திய அரசு.. டிச. 19ல் ஆர்ப்பாட்டம்... ஈ.வி.கே.எஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம் காங்கிரஸ் கட்சியை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

TNCC to protest against centre on Dec 19

மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியை அரசியல் களத்தில் நேரடியாக சந்திக்க துணிவில்லாமல் சுப்பிரமணியன் சுவாமியை தூண்டிவிட்டு நேஷனல் ஹெரால்டு வழக்கு மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வழக்கை எவ்வித தயக்கமும் இன்றி மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.

ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்திராகாந்தியின் மீது எத்தகைய அடக்குமுறைகளை ஏவிவிட்ட போதும் இந்திராகாந்தி அதனை தளாராமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றாரோ, அதேபோல அவரது மருமகள் சோனியா காந்தியும் நிச்சயம் சந்தித்து வெற்றிவாகை சூடுவார்.

பாஜகவின் இந்த பழி வாங்கும் போக்கை மக்கள் மன்றத்தில் அமல்படுத்தும் வகையில் டிசம்பர் 19-ம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+