தூத்துக்குடியில் மோசமான நிலையில் பேருந்துகள்.. குலைநடுக்கத்தில் பயணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் அரசு பஸ்கள் மோசமான நிலையில் காட்சியளிப்பதால் அவற்றில் பயணிகள் உயிர் பயத்தில் பயணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் பல பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சாத்தான்குளம் பணிமனையி்ல் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் இப்படி குறைபாட்டுடன் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் கிராம மக்களும், நகர பகுதி மக்களும் டவுண் பஸ் வந்தாலே ஒரமாக ஒதுங்குகின்றனர். குறிப்பாக காலை, மாலை இயக்கப்படும் நகர பஸ் பராமரிப்பு மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இப்படி சில பஸ்கள் வழக்கம் போல் நேற்று மாலை இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் பயணம் செய்தனர். இவற்றில் பல திடீரென கியர் ராடு உடைந்ததால் அந்தந்த பiகுதிகளில் நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த பிற பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இனியாவது பழுதடைந்த நிலையில் இருக்கும் பஸ்களை சீரமைத்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications