இடஒதுக்கீடு தராவிட்டால், எங்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் - தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை!
சென்னை: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி, முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், மாநிலங்களில் 7 சதவீத இட ஒதுக்கீடும் அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களின் எதிர்ப்புகளை தேர்தல் நேரத்தில் சந்திக்க கட்சிகள் தயாராக இருக்கட்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் எச்சரித்துள்ளார்.
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை, காரைக்கால், மும்பை உள்ளிட்ட இடங்களில் ஜவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜனவரி 28ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லட்சக்கணக்கில் இந்தப் போராட்டத்திற்கு ஆண்களும், பெண்களுமாக இஸ்லாமியர்கள் திரண்டதால் போலீஸாரே ஸ்தம்பித்துப் போயினர். இருப்பினும் போராட்டத்தின்போது எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் போராட்டம் அமைதியாக நடந்தது.
இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் பேசுகையில், இந்தியாவில் மோசமாக உள்ள முஸ்லிம்களின் நிலையை உயர்த்த வேண்டுமானால், அவர்களுக்கு மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடும், மாநிலங்களில் 7 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிவுறுத்தியது. அது அறிக்கை அளித்து வருடங்கள் ஓடிவிட்டன.
ஆனால், இதுவரை ஒன்றும் நடந்தபாடில்லை. எனவேதான், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, இத்தனை லட்சக்கணக்கான மக்களை இங்கு கூட்டியுள்ளோம். காசு கொடுத்தும் சாராயம் வாங்கிக் கொடுத்தும் இந்தக் கூட்டம் இங்கு கூட்டப்படவில்லை.
தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளும் கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியில், முஸ்லிம்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போதாது. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து அமர்ந்த பிறகு ஒன்றும் செய்யவில்லை.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக, இப்போது அதிகாரத்தில் உள்ள கட்சிகளிடம் இங்கு கூடியுள்ள கூட்டம் தெரிவித்துக்கொள்வது ஒன்றுதான்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்குள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுங்கள். எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி, நீங்கள் ஆதாயம் அடைந்துகொள்ளுங்கள். எங்கள் ஓட்டுக்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது, எங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள் என்றார் அவர்.
உண்மையில் இது சிறை நிரப்பும் போராட்டமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாத காரணத்தால் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications