தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
சென்னை : வெப்பசலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. வெப்பத்தால், அதிகப் புழுக்கம் நிலவுகிறது.
இந்நிலையில், வெப்பசலனம் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தின் மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி ஆகிய இடங்களி்ல் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications