நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தது இதற்காகத்தான்.." போட்டு உடைத்த டிடிவி தினகரன்!
சென்னை: நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
ஒரு டிடிவியும் ஒரு ஓபிஎஸ்சும் இணைந்ததற்கே இப்படி பதறுகிறார்கள். பழனிசாமிக்கு நான் சொல்வது எல்லாம் நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம்.
பண மூட்டையோடு திரிபவர்களை அதிமுகவை தொண்டர்களின் கையில் ஒப்படைப்போம். அதிமுக ஒரு சில சுயநலவாதிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை மீட்டெடுக்கிற பொறுப்பு என்னிடமும் ஓ பன்னீர் செல்வத்திடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றி காட்டுவோம்.
திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் செய்யாமல் ஏமாற்றி விட்டது. 60 மாதங்களில் வர வேண்டிய கெட்ட பெயரை 24 மாதங்களில் பெற்றுவிட்டது. அதே நேரத்தில் 4 ஆண்டுகள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி செய்த துரோக ஆட்சியால் தமிழக மக்கள் வெகுண்டெழுந்து திமுக கையில் ஆட்சியை கொடுத்தார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையில் 22 பேர் குருவியை போல சுட்டுக்கொல்லப்பட்ட போது எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருந்தால் முதல்வரை பார்த்து கேட்கும் அருகதை அவருக்கு இருந்து இருக்கும். தமிழக அரசாங்கத்தின் காவல்துறையின் மெத்தன போக்கால் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல், போதை கலாசாரத்தை ஆட்சியாளர்கள் தடுத்த நிறுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாகவும் எங்களின் கோரிக்கையாகவும் உள்ளது. பணபலத்தால் நிர்வாகிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஓ பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு என்ற அடிப்படையில் தான் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் பழனிசாமி தரப்புக்கு கொடுத்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பு வந்தால் அது திரும்ப பெறப்படும் என்பதுதான் உண்மை. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
வட தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்று நீதிமன்றத்தில் நிற்காத ஒரு அரசாணையை நிறைவேற்றினாரோ.. அது போல கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்காக இந்த நிகழ்வுகள் எல்லாம் பயன்படும். ஏனெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்புதான் இறுதியாக உறுதி செய்யப்படும் என்பதுதான் எனது நம்பிக்கை. அதன்படி ஓ பன்னீர் செல்வம் தான் இறுதியாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications