குடியிருப்பில் புகுந்த சிறுத்தை.. திருப்பத்தூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. மக்களே உஷார்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை பெயிண்ட் அடித்த தொழிலாளியை தாக்கிவிட்டு குடியிருப்புக்குள் நுழைந்து கார்பார்க்கிங்கில் பதுங்கி உள்ளது. இந்த சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மாலையில் பள்ளியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் திருப்பத்தூரை சேர்ந்த 55 வயது நிரம்பிய கோபால் என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது திடீரென்று அங்கு சென்ற சிறுத்தை கோபாலை தாக்கியது. அவர் அலறி துடித்தார். இதற்கிடையே சிறுத்தை அங்கிருந்து அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து கார் பார்க்கிங்குள் நுழைந்தது. இந்த தாக்குதலில் கோபால் தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கார் பார்க்கிங்கில் சிறுத்தை பதுங்கிய நிலையில் பள்ளியில் இருந்த மாணவிகள் அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனத்துறையினர் விரைந்து வந்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் நடைமுறை பற்றி அவர்களிடம் விளக்கி கூறினர்.
இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒலிபெருக்கியில் சிறுத்தை நடமாட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதோடு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. இதற்கிடையே தான் கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை இன்னும் பிடிபடவில்லை. சிறுத்தையை மயக்கஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் மாணவ-மாணவிகளின் நலன் கருதி திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சிறுத்தை சிக்காமல் இருப்பதாலும், சிறுத்தையை பிடிக்க முயலும்போது ஒருவேளை அது தப்பித்துவிடலாம் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications