தூத்துக்குடி: ஊருக்குள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - பெண்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி: டாஸ்மாக் மதுக்கடைகள் நெடுஞ்சாலைகளில் இருந்து ஊருக்குள் படையெடுப்பதால் பெண்கள் கடும் கோபத்திலும், பயத்திலும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படுகின்றன. பல கடைகளை ஊருக்குள் மாற்ற முயற்சி நடக்கிறது. நெடுஞ்சாலைகளையே சாதாரண சாலைகளாக மாற்றி வருகின்றனர்.

ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை மாற்றுவதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியிருப்பு பகுதியில் மதுக்கடை
தூத்துக்குடி அருகே உள்ளது கழுகுமலை செந்தூர் நகர், செந்தில்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள சாலையருகே தனியார் மருத்துவமனை மற்றும் சிஎஸ்ஐ சர்ச், பிள்ளையார் கோயில் உள்ளது.
டாஸ்மாக் கடை
இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு மதுக்கடை அமைந்தால் இப்பகுதி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். வாகன ஓட்டிகளுக்கும் குடிமகன்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் எதிர்ப்பு
இதையடுத்து செந்தூர் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கழுகுமலை காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஷாஜகானிடம் மனு கொடுத்து சென்றனர்.
காவல்நிலையம் முற்றுகை
மனுவை பெற்று கொண்ட அவர் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நெடுஞ்சாலை மதுக்கடைகள் ஊருக்குள் படையெடுப்பதால் இன்னும் பல புதிய குடிமகன்களை இந்த அரசு உருவாக்க போகிறதா என்பது பொதுமக்களின் கேள்வியாகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications