நசுக்கப்படும் கருத்துச் சுதந்திரம்... பத்மபூஷன் விருதை 'ரிடர்ன்' செய்கிறார் விஞ்ஞானி பார்கவா
சென்னை: இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்தும், அறிவியலுக்கு முக்கியத்துவம் தரப்படாததைக் கண்டித்தும் தனக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதைத் திரும்பத் தருவதாக நாட்டின் மூத்த வி்ஞ்ஞானிகளில் ஒருவரான பி.எம். பார்கவா தெரிவித்துள்ளார்.
இவர் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார். நாடு முழுவதும் எழுததாளர்கள், இலக்கியவாதிகள் .தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகளைத் திரும்பத் தரும் நிலையில் அந்த பட்டியலில் ஒரு விஞ்ஞானி முதல் முறையாக இணைந்துள்ளார்.

எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளிடையே ஆன்லைன் கையெழுத்து இயக்கம் ஒன்று நடந்து வந்தது. அதில் 107 மூத்த விஞ்ஞானிகள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில் பார்கவா தனது விருதைத் திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்கவா கூறுகையில், அறிவியலுக்காக நான் 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். இதில் பத்ம விருதுக்கு சிறப்பிடம் உண்டு. ஆனால் தற்போது நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் நிலையில் அறிவியல் புறக்கணிக்கப்படும் நிலையில் இந்த விருது தேவையா என்ற எண்ணம் எனக்கு வந்துள்ளது.
எனவே இதைத் திரும்ப அரசிடமே வழங்கி விட முடிவு செய்துள்ளேன். அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தே இந்த முடிவை எடுத்தேன். இது எனது தனிப்பட்ட முடிவாகும்.
இதேபோல இளம் விஞ்ஞானிகளும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார் பார்கவா.
1986ம் ஆண்டு பத்மபூஷன் விருதைப் பெற்றவர் பார்கவா என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications