ஒகனேக்கலில் ஓஹோன்னு கூட்டம்.. குளிக்கத்தான்.. 2 மாத தடை நீங்கியதால் உற்சாகம்!
86 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் குளிக்க அருவியில் அனுமதி வழங்கப்பட்டது.
தருமபுரி: 86 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து கூட்டம் நிரம்பி வருகிறது.

அனுமதி மறுப்பு
கனமழை, வெள்ளம், கடும் காற்று என இரண்டு மாதங்களாகவே இயற்கை சீற்றம் தமிழகத்தில் காணப்பட்டு வந்தது. இதனால் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தடை
கர்நாடக மாநில மழை காரணமாகவும் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் வெள்ளம் காரணமாகவும் நீண்ட நாள்கள் தடை போடப்பட்டது. ஏனென்றால் இங்கு பெருக்கெடுத்த வெள்ளம் பாறைகளை அனைத்தையும் மூழ்கி ஓடிக் கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் தவித்தனர்.

86 நாட்கள்
பிறகு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்ப ஆரம்பித்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இரண்டு வாரங்கள் இந்த பராமரிப்பு முடிந்த பிறகு தற்போது அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 86 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி என்பதால் ஆர்வத்துடன் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் காலாண்டு விடுமுறையில் சனி-ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் தலை அதிகமாகவே காணப்பட்டது.

களை கட்டும் அருவி
சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தார்கள். இது மட்டும் அல்லாமல் தொங்கு பாலமும் திறக்கப்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டதால், அதிலும் நின்று கொண்டு மக்கள் ரசித்தவாறே சென்றனர். பரிசில் இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அருவியில் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு விட்டதால், ஒகனேக்கல் களை கட்டி வருகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications