காவிரி பிரச்சினை : செப்.16ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு - வணிகர் சங்கம் அறிவிப்பு
சென்னை: சென்னை: காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தில் வரும் 16-ம் தேதி
கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 16ம் தேதி முற்றுகை, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, காவிரி போராட்டக் குழு அறிவித்துள்ளது.

தமிழக அரசு உரிய காலத்தில் காவிரி நீரைப் பெற்றுத் தரவில்லை. காவிரி பிரச்னையில் மத்திய அரசு மெளனம் காக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டுள்ள தண்ணீர் போதுமானது அல்ல என்பதால், கூடுதல் தண்ணீரை பெறுவதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கக் கோரியும் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய கலால் வரி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டமும், மருத்துவக் கல்லூரி சாலையில் மறியல் போராட்டமும், திருவாரூர் வெங்கக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டமும், திருவாரூர் - மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டமும், நாகை பனங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முன் முற்றுகைப் போராட்டமும், கிழக்குக் கடற்கரை சாலையில் மறியல் போராட்டமும் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு இதர வர்த்தக சங்கங்களும் ஆதரவளிக்க விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்றும் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். 16ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஓட்டல்கள், லாரி ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications