ஆர்.கே.நகரில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிக்கை.. டிராபிக் ராமசாமி மனு டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கண்காணிப்பு குறித்த டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் டிராபிக் ராமசாமி. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று, டிராபிக் ராமசாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், பதற்றமான 29 இடங்களில் 104 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் துணை ராணுவம் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications