ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்.. தென் மாவட்டங்களுக்கு மீண்டும் துவங்கியது ரயில் சேவை!
தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக காரைக்காலிருந்து - பெங்களூர் சென்ற பயணிகள் ரயிலை கடந்த 19ந் தேதி சேலத்தில் 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலும் தடைபட்டது.

இதேபோல் மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் திரண்டிருந்த மாணவர்கள் கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயிலை நடுவழியில் மறித்து தடுத்து நிறுத்தினர். மாணவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அந்த ரயில் தொடர்ந்து 5 நாட்களாக அதே இடத்திலே நின்று கொண்டிருந்தது.
இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்ட களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறியதால் தொடர்ந்து 5வது நாளாக விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 150க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, இன்று மாலை 6.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று இரவு முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் செல்லும் வழித்தடம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அந்தந்த வழித்தடங்களிலே ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications