For Daily Alerts
Just In
தண்டவாளத்தில் மழை நீர்.. சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு! எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
சென்னை: ரயில் தண்டவாளத்தில் நீர் தேங்கியதால் சென்னை கடற்கரை- தம்பரம், மற்றும் புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் தாமதமாக வந்து செல்கின்றன.
கடற்கரை-தாம்பரம் நடுவேயான ரயில் பாதை, தண்டவாளத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்படுகின்றன. சில ரயில்கள் பல்லாவரம் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
பல்லாவரம், தாம்பரம் இடையே நீர் அதிகமாக தேங்கியுள்ளது. செங்கல்பட்டிலும் ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இது போல் சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். மாலையில் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என்று தெரிகிறது.
Comments
English summary
Due to the heavy rain train transport affected in Chennai.
Story first published: Tuesday, December 1, 2015, 14:59 [IST]