பரீட்சைதானே.. எதற்குப் பயம்.. மாணவர்களுக்கு தைரியம் கொடுத்த திறன் பயிற்சி!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு பயம் இல்லாமல் பொதுத் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி கொடுக்கப்பட்டது.

பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் இப்பயிற்சியை துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியை ஜாக்குலின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பயிற்சியாளர் வினைதீர்த்தான் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர் மனிதன் வாழ்வில் முன்னேற சிறந்த சொற்களான வணங்குங்கள், வாழ்த்துங்கள், புன்னகையுங்கள் ஆகிய சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.

தேவை ஏற்படும் நேரத்தில் நன்றி, மன்னிப்பு கேட்க தயங்ககூடாது போன்ற வாழ்வில் உயரும் சில வழிகளை கூறினார். மாணவர்கள் படிக்கும் போது READ, RECORD, REMEMBER, REFER, REVISE, REPEAT என்ற 6 R'S நினைவில் கொண்டு படித்தால் நன்மை சேர்க்கும் என்று கூறினார்.

காலை எழுந்தவுடன் மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கத்தை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார். படித்ததை திரும்பத் திரும்ப எழுதி பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் படித்தது நினைவில் இருக்கும் என்று கூறி மாணவர்களை தேர்வுக்கு ஊக்கப்படுத்தினார்.

பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications