மரக்கிளை விழுந்து மின்கம்பி அறுந்தது.. மதுரை- திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: குழித்துறை அருகே மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பி அறுந்ததால் மதுரை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்த விரிகோடு என்ற பகுதியில் மரம் முறிந்து, ரயில் பாதை மின்சார கம்பியில் விழுந்ததால், மின் கம்பி அறுபட்டது. இதனால் ரயில்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.

மதுரை, நெல்லை, நாகர்கோயில் மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications