Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கலான சிக்னல் கோளாறு! அரக்கோணத்தில் அவதியான 5000 பேர்! என்ன ஆச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரயில் பயணிகள் மட்டுமின்றி, அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள திருவலங்காடு ரயில்வே இணைப்பு பகுதியில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரவேண்டிய மின்சார ரயில்கள் அனைத்தும் திருவலங்காடு ரயில் நிலைய பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்சார ரயில்கள்

மின்சார ரயில்கள்

இதேபோல், எதிர்முனையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல வேண்டிய ரயில்கள் மற்றும் திருத்தணி, அரக்கோணம் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் என அனைத்து ரயில்களும் அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற அதிகாரிகளும், தொழிலாளர்களும், ரயில்களில் சிக்கித் தவித்தனர்.

கடும் அவதி

கடும் அவதி

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டிய மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் அவ்வழியாக சென்ற விரைவு ரயில்களில், நடுவழியில் பயணிகளை ஏற்ற முயன்றதால், தண்டவாளத்தில் இறங்கி ரயில் பயணிகள் மாற்று ரயில்களை பிடிக்க ஓட்டம் பிடித்த சம்பங்களும் நிகழ்ந்தன.

 ரயில் பயணிகள்

ரயில் பயணிகள்

மேலும், இந்தப் பகுதியிலிருந்து ரயில் பயணிகள் தங்களது இடங்களுக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதிகளும் இல்லாத காரணத்தினால் ரயில் பணிகள் சுமார் 5000 பேர் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல், குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் வராததால், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்துக்கிடந்தனர்.

நிம்மதி

நிம்மதி

இதனையடுத்து, தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு வந்த ரயில்வே பொறியாளர்கள், ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் சிக்னலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து மீண்டும் நடைபெற்றது. இதனால் ரயில் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+