சிக்கலான சிக்னல் கோளாறு! அரக்கோணத்தில் அவதியான 5000 பேர்! என்ன ஆச்சு தெரியுமா?
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரயில் பயணிகள் மட்டுமின்றி, அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள திருவலங்காடு ரயில்வே இணைப்பு பகுதியில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரவேண்டிய மின்சார ரயில்கள் அனைத்தும் திருவலங்காடு ரயில் நிலைய பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்சார ரயில்கள்
இதேபோல், எதிர்முனையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல வேண்டிய ரயில்கள் மற்றும் திருத்தணி, அரக்கோணம் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் என அனைத்து ரயில்களும் அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற அதிகாரிகளும், தொழிலாளர்களும், ரயில்களில் சிக்கித் தவித்தனர்.

கடும் அவதி
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டிய மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் அவ்வழியாக சென்ற விரைவு ரயில்களில், நடுவழியில் பயணிகளை ஏற்ற முயன்றதால், தண்டவாளத்தில் இறங்கி ரயில் பயணிகள் மாற்று ரயில்களை பிடிக்க ஓட்டம் பிடித்த சம்பங்களும் நிகழ்ந்தன.

ரயில் பயணிகள்
மேலும், இந்தப் பகுதியிலிருந்து ரயில் பயணிகள் தங்களது இடங்களுக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதிகளும் இல்லாத காரணத்தினால் ரயில் பணிகள் சுமார் 5000 பேர் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல், குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் வராததால், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்துக்கிடந்தனர்.

நிம்மதி
இதனையடுத்து, தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு வந்த ரயில்வே பொறியாளர்கள், ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் சிக்னலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து மீண்டும் நடைபெற்றது. இதனால் ரயில் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications