சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலைமறியல் வாபஸ்
சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை: பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை பிறகு தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்லவன் இல்லத்தின் முன்பு, 500க்கும் மேற்பட்டோர் நள்ளிரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு பேருந்துகள் மீது கற்களை வீசி மறியலில் ஈடுப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நாற்காலிகளை வீசி எறிந்தும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவந்தது.
இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சங்க நிர்வாகிகள் கூறுகையில் போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்கிறோம். நாளை முதல் வழக்கம் போல பேருந்துகள் இயங்கும்.
வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அரசுடன் பேச்சுவார்த்தையில் இணைக்கமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 27-ஆம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications