ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் எல்லோரும் பணிக்கு வருவார்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் எல்லோரும் பணிக்கு வருவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் எல்லோரும் பணிக்கு வருவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 5வது இன்றும் நாளாக தொடர்கிறது. ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்'' என்றார்.
மேலும் ''தொழிற்சங்கங்கள் கோரும் 2.57 மடங்கு ஊதியத்திற்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்படுகிறது. 8 மாதத்தில் ரூ.2,175 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.350 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. '' என்றார்.
எனவே ''தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் அனைவரும் பணிக்கு வருவார்கள்'' என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.