மே 15 முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மே 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து தொழிலாளர்கள் போக்குவரத்து சங்கம் இன்று அறிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதையடுத்து 55 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். குரோம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
1 லட்சத்தி 30 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,
90 சதவீத பேருந்துகள் இயங்காது எனவும் சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications