குற்றாலத்தில் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு- கல்லூரி மாணவிகள் நடத்திய ஆய்வில் சுற்றுலாப் பயணிகள் கருத்து
குற்றாலம்: மதுக்கடைகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவது குறித்து தனியார் கல்லூரி மாணவிகள் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். இந்த நாட்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் "குற்றாலம் ஒரு ஆய்வு"எனும் தலைப்பில் கல்லூரி முதல்வர் ராஜேஷ்வரி தலைமையில் பேராசிரியைகள் மேற்பார்வையில் குற்றாலம், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

எந்தெந்த அடிப்படையில்...
சுகாதாரம், அடிப்படை வசதிகள்,தங்கும் வசதி, உணவகங்கள், திருடர்கள் தொல்லை, வாகன நிறுத்தும் இடத்திற்கான கட்டணங்கள், உடைமாற்றும் அறை வசதிகள், பொழுது போக்கு வசதிகள், அருவிகளுக்கு செல்லும் பாதைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம், குற்றாலத்தின் அழகை பாதுகாக்கும் ஆலோசனைகள் கழிவறை வசதி , உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனியாக வருபவர்கள், நண்பர்களோடு வருபவர்களிடம் கேட்டு படிவத்தில் நிரப்பி ஆய்வு செய்தனர்.

உடை மாற்றும் வசதி..
இதில் எராளமான பெண்கள் மாணவிகளின் கேள்விக்கு பெண்கள் உடைமாற்றும் அறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.

குடிகாரர்களிடம் இருந்து பாதுகாப்பு
மேலும் குளிக்க வரும் ஆண்கள் குடித்து விட்டு பண்ணும் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகவும், பலர் குளித்து, குடித்து கும்மாளம் போட்டு வருவதாகவும், அவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

டாஸ்மாக் மூட வேண்டும்
அங்குள்ள இரண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த கள ஆய்வு அறிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்கப் படும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications