துக்கையாண்டி சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்!
Subscribe to Oneindia Tamil

பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி தமிழக காவல்துறை அதிகாரி துக்கையாண்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து துக்கையாண்டி சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், துக்கையாண்டியை சஸ்பென்ட் செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications