திருச்சி: பதற்றமான 214 வாக்கு சாவடிகளில் வெப் காமிரா கண்காணிப்பு
திருச்சி: திருச்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 214 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக வெப் கேமரா வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டரும், திருச்சி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாளை (இன்று )நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 2,319 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி குடிநீர், கழிவறை, மாற்று திறனாளிகளுக்காக சாய்வுதளம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் திருச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 410 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 214 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா‘ பொருத்தி இணையதளம் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இணையதள வசதி இல்லாத வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதற்காக 240 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 244 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் வெளி இடங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோரும் அடங்குவார்கள். பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய பெல் நிறுவனத்தின் பொறியாளர் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தயார் நிலையில் இருப்பார். தேவைப்பட்டால் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றம் செய்யப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications