திருச்சியில் இளம் பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
திருச்சியில் இளம்பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இளம்பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா - உஷா தம்பதியை ஹெல்மட் அணியாததால் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் இருசக்கர வாகனத்துடன் தம்பதிகள் கீழே விழுந்தனர்.

இதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications