முக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
முக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும் என்று திருச்சி ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருச்சி: முக்கொம்பு அணையில் உடைந்த பாலம், மதகுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பில் உள்ள பாலம் இடிந்து விழுந்த பகுதியை கலெக்டர் ராசாமணி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திருச்சி முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் பகுதியில் கொள்ளிடத்தில் உள்ள 6 முதல் 13 வரையிலான தூண்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அணையின் 9 மதகுகள் பழுது ஏற்பட்டுள்ளது.

முக்கொம்பை பொறுத்த வரை காவிரியில் 41 மதகுகளும், கொள்ளிடத்தில் இரு பிரிவாக 45 ஷட்டர்களும் உள்ளன. அவற்றில் 10 ஷட்டர்கள் உறுதியாக உள்ளது. மற்ற சட்டர்களின் ஸ்திர தன்மை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது" என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூர் அணையிலிருந்து இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதனால், இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், மதியத்திற்கு பிறகு முக்கொம்பிற்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
முக்கொம்பில், கொள்ளிடம் அணை உடைந்துள்ளதால் வெள்ள பாதிப்புகளோ, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையோ ஏற்படாது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் காவிரி வழியாக தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

கொள்ளிடத்தை பொறுத்தவரை ஆற்றில் கூடுதலாக வரும் உபரி நீர் மட்டுமே திறந்து விட பயன்படுத்தப்படும். தற்போது அணை இடிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொள்ளிடம் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.
கொள்ளிடத்தில் அணை மதகுகள் உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர்." என்று தெரிவித்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications