திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் உடைத்து திருட முற்பட்டுள்ளார். சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அந்நபரை வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் திருட முற்பட்ட நபரைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications