திருச்சி ரயில்வே பெண் இன்ஸ்பெக்டர் திடீர் தற்கொலை! - வீடியோ
மானாமதுரையைச் சேர்ந்த அமுதசெல்வி, திருச்சி ரயில்வே போலீஸில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். அவர் உடல்நலக்குறைவால் மருத்துவவிடுப்பில் இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை: திருச்சி ரயில்வே போலீஸில் வேலை பார்த்து வந்த இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை கண்ணர் தெருவில் வசித்து வருபவர் ராஜபாண்டி. இவருடைய மணைவி அமுதசெல்வி, திருச்சி ரயில்வே போலீஸில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால், அவர் சிகிச்சை பெறுவதற்காக நான்கு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்துள்ளார்.
ஆனால், திடீரென அவர் மானாமதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் முகமது அப்துல்லா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி, தற்கொலைக்கான காரணத்தை விளக்கி கடிதம் எழுதிவைத்துள்ளார். அமுதசெல்வி இயல்பிலேயே தைரியமானவர் என்பதால் அவருடைய தற்கொலை அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications